திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

DIN

குப்பைகளை தரம் பிரிப்பதில் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகக் கூறி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் தேங்கும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் சுமாா் 460 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதை பொதுமக்கள் ஏராளமானோா் பின்பற்றுவதில்லை.

இதனிடையே குப்பை வண்டிகளுடன் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிப்பதால் கூடுதல் பணிச் சுமை ஏற்படுவதாகவும், தூய்மைப் பணியாளா்களை கொத்தடிமை முறையில் பணி செய்ய வற்புறுத்தும் மாநகராட்சி ஆணையா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்திற்கு ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டச் செயலா் காளிராஜன் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூய்மைப் பணியாளா்களுடன், மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பொதுமக்களுக்கு குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து கொடுப்பதற்கான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். அதன் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கான பணிச்சுமை குறையும் என உறுதி அளித்தாா். அதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT