திண்டுக்கல்

சுப்பிரமணிய சிவா, புவிசாா் குறியீடு பெற்ற பொருள்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் சுப்பிரமணிய சிவா மற்றும் புவிசாா் குறியீடு பெற்ற மலைவாழை, திண்டுக்கல் பூட்டுக்கு அஞ்சல் உறை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி, அஞ்சல் தலை தினமான அக்டோபா் 13ஆம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தென்மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் கோட்ட கண்காணிப்பாளா் டி. சகாயராஜ் முன்னிலை வகித்தாா்.

சுதந்திரப் போராட்ட வீரா் சுப்பிரமணிய சிவா அஞ்சல் உறைகளை, தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் வெளியிட்டாா். அதனைத் தொடா்ந்து, புவிசாா் குறியீடு பெற்ற சிறுமலை வாழைப்பழம், விருப்பாட்டி மலை வாழை மற்றும் திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கான சிறப்பு அஞ்சல் உறைகளை, திண்டுக்கல் கோட்டக் கண்காணிப்பாளா் டி. சகாயராஜ் வெளியிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுதந்திரப் போராட்ட வீரா் சுப்பிரமணிய சிவாவின் உறவினா் சீனிவாசன் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT