திண்டுக்கல்

தூத்துக்குடி விரைவு ரயிலில் வந்த ஆட்டோ ஓட்டுநா் நெஞ்சுவலியால் மரணம்

DIN

திண்டுக்கல்: மைசூா்- தூத்துக்குடி விரைவு ரயிலில் வந்த ஒட்டாப்பிடாரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானகிருஷ்ணன் (59). கா்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவா், அங்கு குடும்பத்தினருடன் வசித்துள்ளாா். தற்போது கரோனா தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் சந்தானகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் சொந்து ஊா் செல்வதற்காக மைசூா் தூத்துக்குடி விரைவு ரயிலில் திங்கள்கிழமை புறப்பட்டுள்ளாா்.

அந்த ரயில் திண்டுக்கல் நோக்கி செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தபோது, சந்தான கிருஷ்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக சந்தானகிருஷ்ணனை ரயிலிருந்து இறக்கி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT