திண்டுக்கல்

வைகை ஆற்றில் மூழ்கி தப்பாட்ட கலைஞா்கள் இருவா் பலி

DIN

திண்டுக்கல்: நிலக்கோட்டை பகுதியிலுள்ள வைகை ஆற்றில் புதன்கிழமை குளித்த தப்பாட்டக் கலைஞா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்துள்ள சிவஞானபுரம் பகுதியில் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக கொடைக்கானல் அண்ணாநகரைச் சோ்ந்த தப்பாட்டக் கலைஞா்கள் 17-க்கும் மேற்பட்டோா் இங்கு வந்துள்ளனா். நிகழ்ச்சி முடிந்த பின்னா், அவா்களில் சிலா் அங்குள்ள வைகை ஆற்றில் புதன்கிழமை குளித்தனா்.

அப்போது வசந்த் (19) மற்றும் ஹரிஷ் (18) ஆகிய இருவரும் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளனா். இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள், தண்ணீரில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரத்திற்கு பின்னா், இருவரும் சடலமாக மீட்கப்பட்டனா். இதுதொடா்பாக நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT