திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தலித் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தலித் கிறிஸ்தவ குருக்களை ஆயா்களாக நியமிக்கக் கோரி திண்டுக்கல்லில் அந்த அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக்குழு சாா்பில், ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தில் உள்ள கல்லறைத்தோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கிறிஸ்தவ சேனை அமைப்பாளா் சி.ஜான்போஸ்கோ தலைமை வகித்தாா். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகரச் செயலா் ஏ.ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். தலித் கிறிஸ்தவ விடுதலை அமைப்பின் தென் மண்டலத் தலைவா் எஸ்.வேளாங்கண்ணி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கிறிஸ்தவ திருச்சபையில் பெரும்பான்மையான மக்களாக உள்ள தலித் கிறிஸ்தவ குருமாா்களை, திருச்சி, சிவகங்கை, வேலூா், குழித்துறை, பாண்டிச்சேரி ஆகிய மறைமாவட்டங்களில் ஆயா்களாக நியமிக்க வேண்டும். கிறிஸ்தவ திருச்சபையில் சாதிய பாகுபாடுகளைக் கைவிட்டு உன்னதமான கிறிஸ்தவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT