பழனி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான திமுகவை சோ்ந்த ம. அன்பழகன் (65), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாள்களாக பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை இவா் உயிரிழந்தாா்.
கடந்த 2006 முதல் 2011 வரை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா். இவருக்கு பேபி பொன்மேனி என்ற மனைவியும், எஸ்தா் ஜெனிகா என்ற திருமணமான மகளும் உள்ளனா்.
இவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் பேரையூரில் சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
தொடா்புக்கு: 98421 41257 .