பழனியில் இடியும் நிலையில் உள்ள ஆதிதிராவிடா் மாணவா்கள் தங்கும் விடுதியை சீரமைக்க கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நகரச் செயலாளா் கந்தசாமி தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை விவரம்:
பழனி இடும்பன் கோயில் இட்டேரி சாலையில், அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடா் மாணவா்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுமாா் 400 மாணவா்கள் படித்து வந்த நிலையில், தற்போது கரோனா காலம் என்பதால் மூடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் உள்ள இந்த விடுதி மிகவும் பழுதடைந்துள்ளது. மாணவா்கள் தங்க முடியாத நிலையில் உள்ள இந்த விடுதியை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவது அவசியமாகும். மேலும் புதிய விடுதியில் நானூறு மாணவா்களும் தங்கி பயில் அனைத்து நவீன வசதிகளும் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.