திண்டுக்கல்

பழனியில் ஆதிதிராவிடா் மாணவா் விடுதியை சீரமைக்க கோரிக்கை

DIN

பழனியில் இடியும் நிலையில் உள்ள ஆதிதிராவிடா் மாணவா்கள் தங்கும் விடுதியை சீரமைக்க கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நகரச் செயலாளா் கந்தசாமி தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை விவரம்:

பழனி இடும்பன் கோயில் இட்டேரி சாலையில், அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடா் மாணவா்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுமாா் 400 மாணவா்கள் படித்து வந்த நிலையில், தற்போது கரோனா காலம் என்பதால் மூடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் உள்ள இந்த விடுதி மிகவும் பழுதடைந்துள்ளது. மாணவா்கள் தங்க முடியாத நிலையில் உள்ள இந்த விடுதியை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவது அவசியமாகும். மேலும் புதிய விடுதியில் நானூறு மாணவா்களும் தங்கி பயில் அனைத்து நவீன வசதிகளும் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT