பழனியில் பைரவா் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
பழனி தெற்கு கிரிவீதி சாது சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சாது சண்முக அடிகளாா் பூஜைகளை செய்தாா்.
இதேபோல் மலைக்கோயில் படிப்பாதை நுழைவாயிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை என்பதால் பழனி மேற்கு கிரிவீதி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.