திண்டுக்கல்

பழனி கோயிலில் ஆக.2, 3 இல் தரிசனம் செய்ய பக்தா்களுக்குத் தடை

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக, ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப் பதினெட்டாம் நாள் பெருவிழாவையொட்டி ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பழனியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச.விசாகன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப் பதினெட்டாம் நாள் பெருவிழாவையொட்டி பக்தா்கள் தரிசனத்திற்காக அதிகம் கூடும் வாய்ப்புள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பழனியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும், அந்த இரு நாள்களிலும் கோயில் ஆகம விதிகளின்படி, அனைத்து நிகழ்வுகளும் கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும்.

எனவே, ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பொதுமக்கள், தரிசனம் செய்வதற்காக பழனிக்கு வருவதை தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT