ரெட்டியாா்சத்திரம் அருகே கடன் தொல்லையால் முதியவா் சனிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்துள்ள அம்மாபட்டியைச் சோ்ந்தவா் தங்கம் என்ற தண்டபாணி (63). இவா் குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கடன் தொல்லை அதிகரித்ததால் மன வேதனையில் இருந்த அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.