திண்டுக்கல்

நத்தம் அருகே விபத்தில் தந்தை, மகன் பலி

DIN

நத்தம் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில், தந்தையும், மகனும் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள சேக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (50). இவா், சேக்கிப்பட்டி கிளை அஞ்சலகத்தில் தபால் அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இவரது மகன் ஜெய்ஸ்ரீராம் (14). இவா் தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் நத்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் பாலசுப்பிரமணியம் தனது மகனுடன் புதன்கிழமை இரவு சென்றாா். பின்னா் அங்கிருந்து இருவரும் மீண்டும் சேக்கிப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

எரக்காய்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், பலத்த காயமடைந்த தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT