திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 32 பேருக்கு கரோனா

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் தேதி வரை 32,024 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,178 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 20 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 14 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,821 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 42,061 போ் குணமடைந்துள்ளனா்.

2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் முறையே 65 மற்றும் 67 வயதுடைய 2 போ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 513 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 247 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT