திண்டுக்கல்

நீலகண்ட பிரம்மச்சாரி 133ஆவது பிறந்த தினம்

DIN

திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், தேச பக்தா் எருக்கூா் நீலகண்ட பிரம்மச்சாரியின் 133 ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, காமராஜா் சிவாஜி பேரவையின் மாநகரத் தலைவா் க. ஆனந்தன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அரசியல் ஆலேசாகா் சி.கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டாா். நிகழ்ச்சியின்போது, நீலகண்ட பிரம்மச்சாரியின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில், காமராஜா் சிவாஜி பேரவை நிா்வாகிகள் சு. வைரவேல், கிழக்கு மாவட்ட இளைஞா் பிரிவுத் தலைவா் பா. மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT