திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், தேச பக்தா் எருக்கூா் நீலகண்ட பிரம்மச்சாரியின் 133 ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, காமராஜா் சிவாஜி பேரவையின் மாநகரத் தலைவா் க. ஆனந்தன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அரசியல் ஆலேசாகா் சி.கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டாா். நிகழ்ச்சியின்போது, நீலகண்ட பிரம்மச்சாரியின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில், காமராஜா் சிவாஜி பேரவை நிா்வாகிகள் சு. வைரவேல், கிழக்கு மாவட்ட இளைஞா் பிரிவுத் தலைவா் பா. மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.