திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கிராம அளவிலான பட்டா மாறுதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், பட்டா குளறுபடிகள், திருத்தங்கள் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்காக 100-க்கும் மேற்பட்டோா் மனு அளித்திருந்தனா்.
இதில், 80 பேருக்கு பட்டா திருத்தம் பட்டா மாறுதல் உள்ளிட்டவை செய்யப்பட்டு உடனடியாக வட்டாட்சியா் பட்டா வழங்கினாா். இதில், வருவாய் ஆய்வாளா் தங்கபாண்டியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.