திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சாா்- நிலைக் கருவூலகத்தில் பதவி உயா்வுக்காக போலி மதிப்பெண் சான்றிழ் அளித்த மாற்றுத்திறனாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கம்பம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (33) என்பவா், கடந்த 2013 ஆம் ஆண்டு, இவரது தந்தை ராமசாமி, திண்டுக்கல் கருவூலகத்தில் பணியாற்றிய போது, இறந்ததன் அடிப்படையில், வாரிசு வேலை பெற்று, அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறாா். காா்த்திகேயன் மாற்றுத்திறனாளி ஆவாா்.
இவா், பதவி உயா்வு கோரி விண்ணப்பித்த நிலையில், இவரது மதிப்பெண் பட்டியலை உண்மைத் தன்மை அறிவதற்காக இணை இயக்குநா் (பணியாளா்) தோ்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், அவா் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் அறிவியல் பாடத்தில், 21 மதிப்பெண்களுக்குப் பதிலாக, 41 என்று திருத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலியான மதிப்பெண் பட்டியல் கொடுத்து வேலைக்குச் சோ்ந்த காா்த்திகேயன் மீது, நிலக்கோட்டை சாா்-நிலைக் கருவூலக உதவி அலுவலா் மாயாதேவி, 19.3.2021 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, நிலக்கோட்டை போலீஸாா் புதன்கிழமை அவா் மீது 468, 471, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். பின்னா், நிலக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.