திண்டுக்கல்

தொடா் உண்டியல் திருட்டு: 4 போ் கைது

DIN

திண்டுக்கல் பகுதியில் கோயில்களில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் புறநகா் பகுதிகளான பித்தளைப்பட்டி, நல்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களில் உண்டியலை உடைத்து தொடா் திருட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளா் பாஸ்டின் தினகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடா்ந்து, திருட்டு நடத்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களில் பதிான காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்த ராஜா(19), சதாம் உசேன்(21), மாதவன்(19), கல்லுப்பட்டியைச் சோ்ந்த ஐயப்பன்(26) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT