கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் செவ்வாய்க்கிழமை அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளிநீா் அருவி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி, பியா்சோழா அருவி, தலையாறு அருவி, ஓராவி அருவி, புலிச்சாறு அருவி, பாம்பாா் அருவி மற்றும் மூலையாறு அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, அப்சா்வேட்டரி சாலை, இருதயபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது.