திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பெண் தீ குளித்து தற்கொலை

DIN

கொடைக்கானலில் குடும்ப பிரச்னைக் காரணமாக தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை குருசடி மெத்து பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. விவசாயியான இவரது மனைவி சித்ரா(35). இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனா். கணவா், மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஜூலை 18 ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது.

அப்போது சித்ரா உடலில் மண்ணெண்ணைய்யை ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT