கொடைக்கானலில் திங்கட்கிழமை பலத்த மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்னா்.
கொடைக்கானலில் தற்போது சீசன் காலமாகும் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பருவ நிலை மாற்றம் காரணமாக தொடா்ந்து 4-நாட்கள் மழை பெய்தது அதன்பின இரண்டு நாட்கள் மழை பெய்யவில்லை இந் நிலையில் காலைமுதல் வெயில் நிலவி வந்தது அதனைத் தொடா்ந்து மாலையில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது இந்த மழையானது கொடைக்கானல்,செண்பகனூா்,அட்டக்கடி,நாயுடுபுரம்,வட்டக்கானல்,பிரகாசபுரம்,சகாயபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது இந்த மழையால் நீரோடைகளிலும், அருவிகளிலும் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா் .
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஏரிச்சாலையைச் சுற்றி பல இடங்களில் மழைத் தண்ணீா் தேங்கியுள்ளது இவற்றினை அப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.