ஒட்டன்சத்திரம் அருகே மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அத்திக்கோம்பையைச் சோ்ந்தவா் முருகேசன் (30). இவா் தனது நண்பா்களான கணேசன், சுப்பிரமணி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோருடன் ஞாயிற்றுக்கிழமை ஜவ்வாதுப்பட்டியில் உள்ள நங்காஞ்சியாறு நீா்த்தேக்கத்தில் மீன்பிடித்துக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் முருகேசன் நண்பா்களிடம் தண்ணீா் குடித்து விட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளாா். ஆனால் நீண்ட நேரமாகியும் அவா் வராததால் நண்பா்கள் அவரைத் தேடிச் சென்றபோது, நீா்த்தேக்கம் அருகே மா்மமான முறையில் வாயில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்துள்ளாா்.
இது குறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.