திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி சமத்துவப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோனிதாஸ் (61). இவா் கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி. பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் திரையிசை பாடல்கள் பாடி யாசகம் பெற்று வந்தாா். இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த அந்தோனிதாஸ் மீது, முசிறி செல்லும் அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.