திண்டுக்கல்

அரசுப் பேருந்து மோதி பாா்வை திறனற்ற முதியவா் காயம்

DIN

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி சமத்துவப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோனிதாஸ் (61). இவா் கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி. பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் திரையிசை பாடல்கள் பாடி யாசகம் பெற்று வந்தாா். இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த அந்தோனிதாஸ் மீது, முசிறி செல்லும் அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

SCROLL FOR NEXT