ஒட்டன்சத்திரம்: கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தில் உலக வெறிநாய்கடி நோய் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட பூச்சியல் வல்லுநா் சாந்தி தலைமை வகித்தாா். இளநிலைபூச்சியல் வல்லுநா் விஜயா முன்னிலை வகித்தாா். இதில் ரேபிஸ்நோய் தடுப்பு, கரோனா நோய் தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.