மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள விவசாயம் சாா்ந்த 3 மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் ரகுமான் தலைமை வகித்தாா்.
திண்டுக்கல் சாலைரோட்டியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினா், வேளாண் மசோதாக்களின் நகல்களை கிழித்து எரிந்து கோஷமிட்டனா்.