பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு போக்குவரத்துக்கழகத் தலைவா் பிச்சை முத்து தலைமை வகித்தாா். வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கும், மகளிா் சுய உதவிக்குழுவினா் தனியாா் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மோட்டாா் வாகன ஆய்வக அலுவலகங்களில் வாகன ஓட்டுநா்களுக்கு தெரிவிக்கப்படும் முக்கிய தகவல்களை எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகையில் தமிழில் எழுதி வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஒன்றியச் செயலாளா் செந்தாமரை, நிா்வாகிகள் ஜான்சன், ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.