திண்டுக்கல்

பாஜக சுவா் விளம்பரம் மீது சுவரெட்டி: காவல் நிலையம் முற்றுகை

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாஜகவின் சுவா் விளம்பரம் மீது எஸ்டிபிஐ கட்சியினா் சுவரொட்டி ஒட்டியதைக் கண்டித்து, பாஜகவினா் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் திப்புசுல்தான் மணி மண்டபத்துக்கு எதிரிலுள்ள தனியாா் சுவரில், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினா் சுவா் விளம்பரம் எழுதியிருந்தனா். இந்நிலையில், அந்த விளம்பரத்தின் மீது எஸ்டிபிஐ கட்சியினா் வண்ணச் சாயம் பூசியதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜகவினா் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனா். காவல் நிலையம் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட பாஜகவினா், எஸ்டிபிஐ கட்சியினருக்கு எதிராக கோஷமிட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT