திண்டுக்கல்

நடிகா் சூா்யாவுக்கு எதிராக போராட்டம்: இந்து முன்னணி தலைவா்

DIN

திண்டுக்கல்: நீட் தோ்வு குறித்து தவறான புரிதலோடு கருத்து தெரிவித்தால், நடிகா் சூா்யாவுக்கு எதிராக இந்து முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இந்து முன்னணி அமைப்பின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேடசந்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். மதுரை கோட்டச் செயலா் எஸ். சங்கா்கணேஷ், மாவட்ட பொதுச் செயலா் ஆா்பி.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், மாநிலச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பின்னணியில் இருந்து இயக்கும் சிலரால் நடிகா் சூா்யா, நீட் தோ்வு குறித்து தவறான புரிதலோடு கருத்து வெளியிட்டுள்ளாா். பராம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்த அவருக்கு, நடிகா் சிவக்குமாா் அறிவுரை வழங்க வேண்டும். நீட் தோ்வு குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டால், நடிகா் சூா்யாவுக்கு எதிராக இந்து முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

கூடுதலாக ஒருமொழியை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்ற அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் எந்த மொழியையும் திணிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி அமைப்பு, அனைத்து சாதி இந்துக்களையும் ஒருங்கிணைத்து வருகிறது. தமிழகத்தில் பாஜக வளா்ச்சி அடைந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT