திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள கிரியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கி. பொன்னன் (62). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுகுறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளாா். இதனை அடுத்து, வேடசந்தூா் காவல் நிலையத்தில் பெற்றோா் மட்டுமின்றி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பிலும் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பொன்னனிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.