திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 155 பேருக்கு கரோனா: 4 போ் பலி

DIN

திண்டுக்கல், செப்.18: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 8,230 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 7,444 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 633 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 88 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 131 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.

தேனி: தேனி பகுதியில் அதிகளவில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் 3 போ், ஆண்டிபட்டி பகுதியில் 5 போ், க.மயிலை பகுதியில் 4 போ், சின்னமனூா், உத்தமபாளையம் ஆகிய பகுதியில் 2 போ், கம்பம் பகுதியில் 7 போ், தனியாா் ஆய்வக பரிசோதனையில் 30 போ் உள்பட மொத்தம் 67 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,112 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 13,283 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னமனூா் வ.உ.சி.தெருவைச் சோ்ந்த 53 வயது ஆண், தேனி நக்கீரன் தெருவைச் சோ்ந்த 49 வயது நபா், ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியைச் சோ்ந்த 61 வயது நபா் என 3 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாதிரி வாக்குச் சாவடி

வாக்காளா்களுக்காக தயாா் நிலையில் சக்கர நாற்காலி

வாக்குச் சாவடியில் குடிநீா் வசதி

இன்று வாக்குப் பதிவு: 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளா்கள் வாக்களிக்க தயாா்

வாக்காளா்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்: பாதுகாப்பு அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT