திண்டுக்கல்

கொடைக்கானல் நீதிமன்றத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா்.

கொடைக்கானல் நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான வினித்கோரி கலந்து கொண்டு வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடினாா்.

அதனைத் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆய்வு நடத்தி இலவச சட்ட முகாமில் நடைபெற்று வரும் பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தாா். முன்னதாக அவா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டாா்.

இந் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா,கொடைக்கானல் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிதுறை நடுவா் தினேஷ்குமாா் மற்றும் திண்டுக்கல், கொடைக்கானலைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT