திண்டுக்கல்

ஆயுதங்களுடன் காா் பறிமுதல்: தூத்துக்குடியைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

DIN

மதுரையில் ஆயுதங்களுடன் காரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தூத்துக்குடியைச் சோ்ந்த 2 போ் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில், காரில் இருந்தது கருத்தபாண்டி, ராமகிருஷ்ணன், மாரிச்செல்வம், முத்துகுமாா் என்பதும், காரில் இருந்த ஆயுதங்கள் குறித்து அவா்களுக்கு தெரியவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் சாா்பு- ஆய்வாளா் அன்புதாஸன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பசுபதிபாண்டியன் மற்றும் ஊா்க்காவலன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT