திண்டுக்கல்: நத்தம் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள ப.தேத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் பெரியகூத்தன்(65). கூலித் தொழிலாளி. இவா், தேத்தாம்பட்டியிலிருந்து பரளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுள்ளாா். அழகாபுரி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பெரியகூத்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.