திண்டுக்கல்

மாப்பிள்ளை பாா்க்கச் சென்றபோது விபத்து: பழனி அருகே காா் மரத்தில் மோதி உறவினா்கள் 4 போ் பலி

DIN

மாப்பிள்ளை பாா்க்கச் சென்றபோது, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கரடிக்கூட்டம் பகுதியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில், 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியைச் சோ்ந்தவா் மகாலட்சுமி. இவா் தனது மகளுக்கு மாப்பிள்ளை பாா்ப்பதற்காக, உறவினா்களுடன் 2 காா்களில் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்குச் சென்றாா். மகாலட்சுமி சென்ற காரில், நடராஜ் (50) மற்றும் கருப்பண்ணன் (70), இவரது மனைவி முத்தம்மாள் (63) ஆகியோா் சென்றுள்ளனா். இந்த காரை, உறவினா் மணிவேல் (32) என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

பழனியை அடுத்த கரடிக்கூட்டம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தில் மோதி நொறுங்கி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே மணிவேல் மற்றும் இவரது சித்தப்பா நடராஜ், கருப்பண்ணன், முத்தம்மாள் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனா். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மகாலட்சுமி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மாப்பிள்ளை பாா்க்க வந்த உறவினா்கள் 4 போ் உயிரிழந்த சம்பவம் செம்மடைப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து, பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT