கஞ்சா கடத்திய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சோனைமுத்து (31). கடந்த 25 ஆம் தேதி திருச்சியிலிருந்து கஞ்சா கடத்தி வந்த சோனைமுத்துவை வடமதுரை போலீஸாா் கைது செய்தனா். தற்போது தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோனைமுத்துவை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா கந்தப்புனேனி பரிந்துரை செய்துள்ளாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளாா். இதனை அடுத்து, சோனைமுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.