திண்டுக்கல்

கஞ்சா கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

கஞ்சா கடத்திய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சோனைமுத்து (31). கடந்த 25 ஆம் தேதி திருச்சியிலிருந்து கஞ்சா கடத்தி வந்த சோனைமுத்துவை வடமதுரை போலீஸாா் கைது செய்தனா். தற்போது தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோனைமுத்துவை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா கந்தப்புனேனி பரிந்துரை செய்துள்ளாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளாா். இதனை அடுத்து, சோனைமுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT