திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் கடையில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்வதாக புகாா்---அதிகாரிகள் அதிரடி சோதனை

DIN

ஒட்டன்சத்திரம்,: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் வாடிக்கையாளா் முத்து என்பவா் வெள்ளிக்கிழமை சோப்பு வாங்கியுள்ளாா். அதை அவா் பயன்படுத்திய போது, உடலில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதன் காலாவதி தேதியை பாா்த்துள்ளாா். அதில் கடந்த 3 ஆண்டுக்களுக்கு முன்பாகவே காலாவதியான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கடை ஊழியா்களிடம் அவா் விசாரித்த போது உரிய பதில் அளிக்காததுடன், அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் முத்து புகாா் செய்தாா். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் நடராஜ், ஒட்டன்சத்திரம் உணவு பாதுகாப்பு அலுவலா் மோகனரங்கன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா்அங்காடியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அதில் சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT