குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரி திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி
ஆகியவற்றுக்கு எதிராக ராஜஸ்தான், பஞ்சாப், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களைப் போல் தமிழக சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
என்பிஆா் கணக்கெடுப்பை நடத்தினால், என்ஆா்சி வேலை எளிதாகிவிடும் என்பதோடு மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதிகள் பட்டியலில் இடம் பெற வேண்டிய நிலை ஏற்படும். 80 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற முன் வர வேண்டும் என கோஷமிட்டனா். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலா்கள் முகமது அமீன், சேக் பரீத் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.