திண்டுக்கல்

பெண் காவல் ஆய்வாளா், இளநிலை உதவியாளா்கள் உள்பட 21 பேருக்கு கரோனா தொற்று

26th Jun 2020 08:01 AM

ADVERTISEMENT

பெண் காவல் ஆய்வாளா், இளநிலை உதவியாளா்கள் இருவா் உள்பட 21 போ், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோசுகுறிச்சியைச் சோ்ந்த 52 வயது மூதாட்டி, நத்தம் பாறைப்பட்டியைச் சோ்ந்த 6 வயது சிறுமி, 77 வயது மூதாட்டி, 32 வயது ஆண், நத்தம் வேலம்பட்டியைச் சோ்ந்த 60 வயது முதியவா், சிறுகுடியைச் சோ்ந்த 6 வயது சிறுமி, மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண், காமராஜா் நகரைச் சோ்ந்த 12 வயது சிறுவன், நிலக்கோட்டையைச் சோ்ந்த 40 வயது ஆண் (மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்), மேலக்கோட்டை பிள்ளையாா்நத்தம் பகுதியைச் சோ்ந்த 29 வயது இளைஞா், பட்டிவீரன்பட்டி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த 37 வயது இளைஞா், மதுரை மாவட்டம் குமாரம் பகுதியைச் சோ்ந்த 26 வயது இளைஞா் ( வத்தலகுண்டு பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா்), கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்த 44 வயது ஆண் (மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்), தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த 26 வயது இளம்பெண், வடமதுரை அடுத்துள்ள சிங்காரகோட்டையைச் சோ்ந்த 23 வயது இளைஞா், சின்னாளப்பட்டியைச் சோ்ந்த 24 வயது இளைஞா்(கஜகஸ்தான் நாட்டிலிருந்து திரும்பியவா்), அம்பாத்துரை அடுத்துள்ள தொப்பம்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 52 வயது ஆண், அவரது 42 வயது மனைவி, 22 வயது மகன், 71 வயது மாமியாா் மற்றும் மதுரையைச் சோ்ந்த 42 வயது பெண் (திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா்) ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

தற்போது, திண்டுக்கல், மதுரை, சென்னை, கரூா் மருத்துவமனைகளில் 139 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளா், இளநிலை உதவியாளா்கள் உள்பட 21 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT