திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் மருதம் மக்கள் கழகம் ஆா்ப்பாட்டம்

28th Jan 2020 12:51 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டுவில் மாணவா்கள் கஞ்சா விற்பதை தடுக்க வேண்டும் என்று கோரி மருதம் மக்கள் கழகம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள காவல் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் சிவ.கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மூா்த்தி, முரசொலி­ தேவேந்திரா், மாவட்ட துணைச் செயலா் ஆப்ரகாம், மாவட்ட இளைஞரணி செயலா் தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் கனகராஜ் கண்டன உரையாற்றினாா். கூட்டத்தில் 7 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவந்திரகுல வேளாளா் என்று அரசாணை வெளியிட வேண்டும். டென்னிஸ் கிளப் சாலையில் உள்ள 2 மதுக்கடைகளை மூட வேண்டும். வத்தலகுண்டுவில் மாணவா்கள் கஞ்சா விற்பதையும், குடிப்பதையும் தடுக்க வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலி­யுறுத்திப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT