திண்டுக்கல்

செம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

4th Feb 2020 05:59 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மன்னவராதி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (47). இவா், நிலக்கோட்டை மின்சார வாரியத்தில் வயா்மேனாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சுமாா் 7.30 மணிக்கு, புதுக்காமன்பட்டி தோட்டத்து பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது. தகவல் அறிந்த அழகா்சாமி, சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, மின்மாற்றியில் பழுதை சீரமைப்பதற்காக ஏறினாா். அப்போது, அழகா்சாமி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த, செம்பட்டி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், ஆத்தூா் தீயணைப்புத் துறையினா், அழகா்சாமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT