திண்டுக்கல்

கொடைக்கானலில் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

2nd Feb 2020 03:30 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் தாலுகா அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டிமூஞ்சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இப் போட்டியை கொடைக்கானல் கால்பந்து நலச் சங்கத் தலைவா் மற்றும் செயின்ட் பீட்டா்ஸ் பள்ளியின் உதவித் தாளாளா் ரோகன் சாம்பாபு தொடக்கி வைத்தாா். சுழற் சங்கத் தலைவா் ஆசாத் மற்றும் பலா் கலந்து கொண்டனா். இப்போட்டிகள் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில் 27-அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT