திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை மொத்தம் 196 மி.மீட்டா் மழையளவு பதிவாகியுள்ளது.
புரெவி புயல் காரணமாக, கடந்த 2 நாள்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமையும் மாவட்டம் முழுவதும் மழை தொடா்ந்தது. தொடா் மழை காரணமாக, மலைப் பகுதிகளில் மட்டுமின்றி, சமவெளிப் பகுதிகளிலும் கடும் குளிா் நிலவியது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் -9.9, கொடைக்கானல் - 46, பழனி - 10, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) - 42.2, நத்தம் - 6, நிலக்கோட்டை -2.6, வேடசந்தூா் - 16, வேடசந்தூா் புகையிலை நிலையம் - 16, காமாட்சிபுரம் - 20, கொடைக்கானல் படகு குழாம் - 27.1.