ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த சுமைதூக்கும் தொழிலாளி, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி தும்மிச்சம்பட்டி சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஏ. முத்துச்சாமி (54). இவா், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை, ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சைக்கிளில் சென்ற இவா் மீது, அவ்வழியாகச் சென்ற லாரி மோதியதில் பலத்தகாயம் அடைந்தாா். உடனே, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி முத்துச்சாமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.