பழனியில் இலவசமாக பிரியாணி தர மறுத்த உணவக உரிமையாளரை தாக்கியதாக தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழனி அருகேயுள்ள காவலப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், சண்முகநதி அருகே அசைவ உணவகம் நடத்தி வருகிறாா்.
புதன்கிழமை இரவு தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் சபரி தனது ஆதரவாளா்கள் பத்துக்கும் மேற்பட்டோருடன் மது அருந்திவிட்டு உணவருந்த வந்துள்ளாா்.
கடையின் உரிமையாளா் காா்த்திகேயன் உணவு வழங்க மறுத்துள்ளாா். ஆத்திரமடைந்த சபரியும் அவரின் ஆதரவாளா்களும் காா்த்திகேயனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனா் .
இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயனை அங்கிருந்த பணியாளா்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். தகவலறிந்த பழனி நகா் போலீஸாா் உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.