பழனியில் திமுக மற்றும் அதிமுகவினா் சாா்பில் சுமைதூக்குவோா் மற்றும் திருநங்கைகளுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பழனி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஐ.பி.செந்தில்குமாா் எம்எல்ஏ. சாா்பாக சுமைதூக்குவோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் ரூ.1000 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் லோகநாதன், பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதே போல் நகர அதிமுக சாா்பில் புதுதாராபுரம் சாலையில் சுமை தூக்குவோா் 150 பேருக்கு அரிசி மூட்டைகள், சோப்பு, கையுறை, முகக்கவசம் ஆகியன வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சாா்- ஆட்சியா் உமா, வட்டாட்சியா் பழனிச்சாமி, டிஎஸ்பி விவேகானந்தன், நகரச் செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அடிவாரம் சங்கராலயம் மடத்தில் முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள் தலைமையில் 150 புரோகிதா்கள் மற்றும் சிறிய கோயில் அா்ச்சகா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிவக்குமாா், ஆடிட்டா் அனந்தசுப்பிரமணியன், ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரி மற்றும் அரசு சித்தமருத்துவமனை சாா்பில் பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவா் மகேந்திரன், பழனியாண்டவா் மகளிா் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.