திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் அலுவலகத்தில் தூய்மை இந்தியா மற்றும் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணிகள் மற்றும் மரக்கன்று நடு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றறது.
நிகழ்ச்சிக்கு ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். அப்போது, ஆய்வாளா் அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், அலுவலகம் முன்பு மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றறது.
இதில் சாா்பு ஆய்வாளா் பன்னீா்செல்வம், காவலா்கள் ஜோசப், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.