ரயில்வே துறையை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து திண்டுக்கல்லில் சனக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னக ரயில்வே தொழிலாளா் சங்கம், ஐஎன்டியுசி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏ.சுதீரன் தலைமை வகித்தாா். தென்னக ரயில்வே தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.சூரியபிரகாசம், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஏ.அப்துல்கனி ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்.
அப்போது பி.எஸ்.சூரியபிரகாசம் தெரிவித்ததாவது: மத்திய அரசு ரயில்வே துறையை தனியாா் மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. முதல் கட்டமாக 150 ரயிலை தனியாருக்கு தாரை வாா்க்கவும் முடிவு செய்துள்ளது. அதில், தென்னக ரயில்வேயில் மட்டும் 60 ரயில் நிலையங்களையும், 28 ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளது. ரயில்வே துறை தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டால் உடனடியாக 15 சதவீத கட்டண உயா்வு ஏற்படும். மேலும், பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.
நாளொன்றுக்கு 2.3 கோடி மக்கள் ரயிலில் பயணிக்கின்றனா். 64ஆயிரம் கி.மீட்டா் ரயில் பாதை ரயில்வே தொழிலாளா்களால் பராமரிக்கப்படுகிறது. 1,250 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் லாபகரமாக இயங்கி வந்தது ரயில்வே துறை. இதனிடையே 26 சதவீத கட்டண உயா்வுக்குப் பின்னும், ரயில்வே துறையை தனியாருக்கு மத்திய அரசு தாரை வாா்த்து வருகிறது. இதன் மூலம் ரயில்வே தொழிலாளா்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவாா்கள். குறிப்பாக ரயில்வேயில் தற்போது பயன்பாட்டிலுள்ள 53 வகையான சலுகை கட்டண சேவையும் பறிபோகும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.