பைக் மோதி மூதாட்டி பலி

ஒட்டன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

ஒட்டன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
      ஒட்டன்சத்திரம் கருவூலக் காலனியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி ஜெர்மனி (65). இவர், ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் சாலையில் உள்ள தேவாலயத்தில் ஜெபம் முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த புது அத்திக்கோம்பையைச் சேர்ந்த சிவசுப்பிரமணிகண்டன் என்பவர் ஜெர்மனி மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்தார்.      உடனே, அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com