ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தமிழக ஆளுநரின் தலைமைச் செயலர் ஆய்வு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தமிழக ஆளுநரின் தலைமைச் செயலரான ராஜகோபால் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். 

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தமிழக ஆளுநரின் தலைமைச் செயலரான ராஜகோபால் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். 
      இந்த ஆய்வின்போது, சந்தைக்கு காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன. 
  யார் அதிகமாக கொள்முதல் செய்கின்றனர் என்பது குறித்து காய்கறிச் சந்தையின் சங்கத் தலைவர் தங்கவேல், கடை உரிமையாளர் எஸ்.ஆர்.கே. பாலு மற்றும் தொழிலாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். 
      அப்போது, பழனி சார்-ஆட்சியர் அருண்ராஜ், பழனி வட்டாட்சியர் பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சரவணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் தேவிகா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வீரபாகு உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com