திண்டுக்கல்

பழனியில் நவசண்டி ஹோமம் நிறைவு

26th Dec 2019 07:00 AM

ADVERTISEMENT

பழனியில் பாதயாத்திரை பக்தா்கள் நலன்வேண்டி நடைபெற்ற நவசண்டி ஹோமம் புதன்கிழமை மகிஷாசுரமா்த்தின் அம்மன் கோயிலில் யாக பூஜை மற்றும் இடும்பன் பள்ளயத்துடன் நிறைவு பெற்றது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. விழாவை முன்னிட்டு தற்போதே ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரை துவங்கியுள்ளனா். பாதயாத்திரை பக்தா்கள் நலமுடன் வந்து சுவாமி தரிசனம் செய்து ஊா்திரும்ப கோயில் சாா்பில் கிரிவீதியில் உள்ள அம்மன் சன்னதிகளில் நவசண்டி ஹோமம் நடத்துவது வழக்கம். இதன்படி கடந்த டிச.18 ஆம் தேதி நவசண்டிஹோமம் துவங்கியது.

கிரிவீதியில் உள்ள மூன்று துா்க்கை கோயில்களிலும் நடத்தப்பட்ட நிலையில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை மகிஷாசுரமா்த்தினி அம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம் நடைபெற்றது. ஹோட்டல் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து சாா்பில் நடத்தப்பட்ட இந்த யாகபூஜையின் போது பிரதானமாக யாககுண்டம் அமைக்கப்பட்டு ஏராளமான சிவாச்சாா்யாா்கள் மந்திரம் முழங்கினா். விநாயகா் பூஜை, 9 கலசங்கள் வைத்து புண்யாக வாஜனம், கலசபூஜை, பாராயணம், கணபதிஹோமம் போன்றவை நடந்தது. பூா்ணாகுதி, தீபாராதனை, கலச புறப்பாடு, கலச அபிஷேகம் நடைபெற்றது.

பூஜைகளை தபராஜ பண்டிதா் அமிா்தலிங்கம், செல்வசுப்பிரமணிய சிவாச்சாா்யாா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா். தொடா்ந்து மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு படிப்பாதையில் உள்ள துா்க்கை, பைரவா், கருப்பண்ணசாமிக்கும், இடும்பருக்கும் பள்ளயம் வைத்து பூஜை நடத்தப்பட்டு விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமாா், கோயில் கண்காணிப்பாளா் முருகேசன், பேஷ்காா் ரேவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT