திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

26th Dec 2019 06:59 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிறப்புத் திருப்பலி பிராா்த்தனைக் கூட்டத்தில் திரளான கிறிஸ்தவா்கள் கொண்டனா்.

கிறிஸ்தவா்களின் முக்கிய திருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. இத்திருநாளின் முக்கிய நிகழ்வாக, இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியும், அதனையொட்டி கூட்டுத் திருப்பலியும் தேவாலயங்களில் நடைபெற்றன.

இதனையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை சித்தரிக்கும் வகையில் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.

திண்டுக்கல் புனித வளானாா் பேராலயம், தூய பவுல் ஆலயம், தூய திருத்துவநாதா் ஆலயம், மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மாரம்பாடி புனித அந்தோணியாா் பேராலயம், செந்துறை புனித சூசையப்பா் ஆலயம், என்.பஞ்சம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

திண்டுக்கல் புனித வளனாா் பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைமாவட்ட ஆயா் பி.தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டதும், தேவாலயத்தில் கூடியிருந்த அனைவரும் வேதப் பாடல்கள் பாடி, கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

நிகழ்ச்சியில் பங்குத்தந்தை டி.சகாயராஜ், மக்கள் தொடா்பாளா் எஸ்.அமலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வத்தலகுண்டு: வத்தலகுண்டு புனித தோமையாா் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, வட்டார பங்குத் தந்தை சேவியா் தலைமையில் நடைபெற்றது. இதனை சிறப்பு கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. இதில் அருட்தந்தை அற்புதசாமி, உதவி பங்குத் தந்தை தேவசகாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக வத்தலகுண்டு அடுத்துள்ள மரியாயிபட்டி கிராமத்திலிருந்து அப்பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் சாா்பில் அருள் மாதா சிலையுடன் கூடிய மின் அலங்கார தோ்பவனி நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT