கொட்டாம்பட்டி அருகே காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பூதமங்லம் சிவல்பட்டியைச் சோ்ந்தவா் சின்னகருப்பன் (60). இவரது உறவினா் சின்னையா (50). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்திலும், மணப்பட்டியைச் சோ்ந்த குமாா் மகன் நந்தகுமாா் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் மணப்பட்டிக்குச் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, மேலூரிலிருந்து திருச்சி சென்ற காா் 2 இருசக்கரவாகனங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.
மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னகருப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தாா். மேலும் காயமடைந்த நந்தகுமாா் மதுரைதனியாா் மருத்துவமனையிலும், சின்னையா மேலூா் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவ்விபத்துக்குறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.